|
எல்லா பச்சைவாழியம்மன் திருக்கோயில்களிளும் இருப்பது போல் இங்கேயும் கருமுனி, கொடிமுனி, தவமுனி, விலாடமுனி, செம்முனி, முத்துமுனி , வாழ்முனி என ஏழு முனிகள் காவல் தெய்வங்களாக வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். ஏழு முனிகளில் இளையமுனியாகிய வாழுமுனி உருவத்தில் மிகப் பெரியவராகக் காணப்படுகிறார். அவரது வலது பாதத்தின் கீழே ஒரு தலை காணப் படுகிறது. ஒரு சில கன்னிக் கோயில்களில் வாழுமுனி ஐந்தாவதாக அமர்ந்திருப்பார். இங்கே முதலிலேயே இருக்கிறார். வழக்கமாகக் கன்னிக்கோயில்களில் குதிரை சிலை ஒன்று இருக்கும். தெற்கு பார்த்து நின்றிருக்கும். இங்கே குதிரை சிலை இல்லை.
பச்சயம்மனுக்கு இருபுறமும் காத்தாயி அம்மன் உள்ளிட்ட பல தெய்வங்கள் உள்ளன. கோயிலுக்கு எதிரே வீரன் அமர்ந்து காவல் காக்கிறார்.
வழிபாடுகள் தமிழ் மொழியில்தான் நடைபெறுகின்றன. சுமார் ‘இருநூறு முன்னூறு ஆண்டுகளாக இருக்கும் கோயில்’ என்கிறார்கள் சரியாகத் தெரியவில்லை.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.
ReplyDeleteSri Pachai vaazhiyamman padhamalar pootri mannadasamy malaradi pootri kathaye poonkanni kazaladi pootri poonkumarasamy poonnadi pootri
ReplyDelete